செய்திகள்

கர்நாடகம் முதல் மந்திரி பிரசாரத்துக்கு செல்லும் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

Published On 2019-04-18 10:08 GMT   |   Update On 2019-04-18 10:08 GMT
கர்நாடகம் மாநில முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமார்சாமியின் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #Kumaraswamy
பெங்களூரு:

பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகம் மாநில முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

அவர்கள் ஹெலிகாப்டரில் இருந்த பைகள் மற்றும் முதல் மந்திரி அமர்ந்துள்ள சீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #Kumaraswamy
Tags:    

Similar News