செய்திகள்

ராணுவத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுகோள்- மோடி பேச்சு பற்றி தேர்தல் கமி‌ஷனில் புகார்

Published On 2019-04-10 15:52 IST   |   Update On 2019-04-10 15:52:00 IST
ராணுவத்துக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று மோடி பேசியது குறித்து தேர்தல் கமி‌ஷனிடம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு புகார் அளித்து உள்ளது. #LoksabhaElections2019 #PMModi #ElectionCommission
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திரமோடி மராட்டிய மாநிலம் லத்தூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார்.

ராணுவத்துக்கு ஆதரவாக அப்போது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முதல் முறையாக ஓட்டு அளிப்பவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக பாலகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு உங்கள் முதல் வாக்கை அளிப்பீர்களா? புல்வாமா தாக்குதலில் பலியான நமது படை வீரர்களுக்கு முதல் வாக்கை சமர்ப்பணம் செய்வீர்களா? என்று கேட்டுக் கொண்டார்.

மோடியின் இந்த பேச்சு குறித்து தேர்தல் கமி‌ஷனிடம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு புகார் அளித்து உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் மோடி பேசியுள்ளார் என்று புகாரில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மராட்டிய மாநில தலைமை தேர்தல் அதிகாரியை தேர்தல் கமி‌ஷன் கேட்டுக் கொண்டுள்ளது. #LoksabhaElections2019 #PMModi #ElectionCommission
Tags:    

Similar News