செய்திகள்

டெல்லியில் குர்ஜார் இன தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா பாஜகவில் இணைந்தார்

Published On 2019-04-10 09:01 GMT   |   Update On 2019-04-10 09:01 GMT
டெல்லியில் குர்ஜார் இனத்தின் தலைவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர். #Gurjarleader #BJP
புது டெல்லி:

பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் தலைவர்களும் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்ற களப்பணிகளில்   ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் தேசிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் குர்ஜார் இன அமைப்பின் தலைவரான கிரோரி சிங் பைன்ஸ்லா பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் ராஜஸ்தான் பாஜக தலைவர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அவரது மகன் விஜய் பைன்ஸ்லாவும் உடன் இணைந்தார்.



இது குறித்து கிரோரி சிங் கூறுகையில், ‘காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் முதல் மந்திரிகளுடனும் பழகியுள்ளேன். இரு கட்சிகளின் கொள்கைகள் குறித்து நன்கு தெரிய வந்தது. அதன் பின்னர், பாஜக தலைவர்களிடமும், பிரதமர் மோடியிடம் அரிதான நல்ல குணங்கள் இருப்பதை உணர்ந்தேன். எனவே பாஜகவில் இணைந்துள்ளேன்’ என கூறினார்.

இந்நிலையில் கிரோரி சிங் பைன்ஸ்லா இன்று  காலை பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய பின்னரே தற்போது தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளார் எனவும், ராஜஸ்தானில் 25 பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வெல்லுவது உறுதி எனவும் ஜவடேகர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Gurjarleader #BJP
Tags:    

Similar News