செய்திகள்

ரபேல் மறுசீராய்வு மனுக்கள் மீது நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Published On 2019-04-09 14:33 GMT   |   Update On 2019-04-09 14:33 GMT
ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வெளியாகிறது. #SC #SCjudgment #Rafale #Rafalereview
புதுடெல்லி:

ரபேல் போர் விமான ஒப்பந்ததில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்ஜோரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில்  மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த சீராய்வு மனு தொடர்பாக விசாரித்த சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.  #SC #SCjudgment #Rafale #Rafalereview  
Tags:    

Similar News