செய்திகள்

ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி உயிர் தப்பினார்

Published On 2019-03-31 08:11 GMT   |   Update On 2019-03-31 08:11 GMT
ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் இன்று எம்.ஐ.ஜி.27 ரகப் போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #IAFaircraft #MiG27aircraft #MiG27crashes
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை எம்.ஐ.ஜி.27 ரகப் போர் விமானம் புறப்பட்டு சென்றது. 

பயிற்சியின் இடையில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் செங்குத்தாக கீழ்நோக்கி பாய்ந்து சிரோஹி மாவட்டத்தில் உள்ள கோடானா கிராமத்தில் ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.



போர் விமானம் தரையில் மோதுவதற்குள் அதில் இருந்த விமானி பாரசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டில் ஒன்பதாவது முறையாக பயிற்சியின்போது போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #IAFaircraft #MiG27aircraft #MiG27crashes
Tags:    

Similar News