செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி கைது

Published On 2019-03-28 19:51 IST   |   Update On 2019-03-28 19:51:00 IST
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். #MilitantArrest
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதியை கைது செய்தனர்.

விசாரணையில், கைதான பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவன் என்பதும், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ரமிஸ் அகமது தர் என்பதும் தெரிய வந்தது. அங்கிருந்து வெடிபொருள்களையும், ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். #MilitantArrest
Tags:    

Similar News