செய்திகள்
காங். மேலிடம் அனுமதித்தால் தேர்தலில் போட்டியிட தயார்- பிரியங்கா காந்தி
காங்கிரஸ் தலைமை விரும்பி கேட்டுக் கொண்டால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். #Congress #priyankagandhi #LSPolls
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக, உ.பி. கிழக்கு பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அமேதி தொகுதியில் வாக்குச் சாவடி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான கூட்டம் நடந்தது.
கட்சிப் பணியாற்ற வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். கட்சியை வலுப்படுத்துவதற்காக செய்ய வேண்டிய காரியம் ஏராளமாக உள்ளன.
காங்கிரஸ் தலைமை விரும்பி கேட்டுக் கொண்டால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்றாலும் கட்சியை பலப்படுத்துவதே முக்கியமான பணி.
பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெற்றுப் பேச்சுகளை மட்டுமே பேசி வருகிறது. இந்த உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் அதுபற்றி மக்கள் தெரிந்து கொள்ளாமல்தான் இருப்பார்கள்.
நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியின் தோல்விகள் பற்றி நாம் எடுத்துச் சொன்னால்தான் மக்களுக்கு மோடி அரசின் உண்மை முகம் தெரிய வரும். மோடி ஆட்சியில் உத்தரபிரதேச மாநில விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை.
நாட்டு மக்கள் அனைவருடைய வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பொய் பிரசாரம் செய்தார். ஆனால் காங்கிரஸ் செய்யக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே சொல்லும். ராஜஸ்தானில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தபடி ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன்களை உடனே தள்ளுபடி செய்தோம்.
ஏழை மக்கள் அனைவருக்கும் ஆண்டு தோறும் ரூ.72 ஆயிரம் குறைந்த பட்ச வருமானமாக வழங்கப்படும் என்று இப்போது காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இந்த பணம் நிச்சயமாக வழங்கப்படும்.
பா.ஜனதா சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சுற்றிப்பார்ப்பதற்காக மட்டும் இங்கு வருகிறார். அவர் இங்கு போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார். #Congress #priyankagandhi #LSPolls
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக, உ.பி. கிழக்கு பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அமேதி தொகுதியில் வாக்குச் சாவடி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான கூட்டம் நடந்தது.
கட்சிப் பணியாற்ற வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். கட்சியை வலுப்படுத்துவதற்காக செய்ய வேண்டிய காரியம் ஏராளமாக உள்ளன.
காங்கிரஸ் தலைமை விரும்பி கேட்டுக் கொண்டால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்றாலும் கட்சியை பலப்படுத்துவதே முக்கியமான பணி.
பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெற்றுப் பேச்சுகளை மட்டுமே பேசி வருகிறது. இந்த உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் அதுபற்றி மக்கள் தெரிந்து கொள்ளாமல்தான் இருப்பார்கள்.
நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியின் தோல்விகள் பற்றி நாம் எடுத்துச் சொன்னால்தான் மக்களுக்கு மோடி அரசின் உண்மை முகம் தெரிய வரும். மோடி ஆட்சியில் உத்தரபிரதேச மாநில விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை.
நாட்டு மக்கள் அனைவருடைய வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பொய் பிரசாரம் செய்தார். ஆனால் காங்கிரஸ் செய்யக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே சொல்லும். ராஜஸ்தானில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தபடி ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன்களை உடனே தள்ளுபடி செய்தோம்.
ஏழை மக்கள் அனைவருக்கும் ஆண்டு தோறும் ரூ.72 ஆயிரம் குறைந்த பட்ச வருமானமாக வழங்கப்படும் என்று இப்போது காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இந்த பணம் நிச்சயமாக வழங்கப்படும்.
பா.ஜனதா சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சுற்றிப்பார்ப்பதற்காக மட்டும் இங்கு வருகிறார். அவர் இங்கு போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார். #Congress #priyankagandhi #LSPolls