செய்திகள்
ஜம்மு காஷ்மீர் - இந்திய ராணுவம் நடத்திய அதிரடியில் பாகிஸ்தான் தளம் அழிக்கப்பட்டது
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் எல்லையில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தளம் அழிக்கப்பட்டது. #JammuKashmir
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஹரி வாக்கர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி வீர மரணம் அடைந்தார்.
இந்நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தளங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பிரிவில் செயல்படும் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கிறது. இது தீவிர ஆபத்தின் அடையாளம் என ராணுவம் தெரிவித்து உள்ளது. #JammuKashmir