செய்திகள்

குஜராத்தில் மாயமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் மீட்பு

Published On 2019-03-18 06:27 GMT   |   Update On 2019-03-18 06:27 GMT
குஜராத்தில் மாயமான ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் ஒரு கால்வாயில் இருந்து நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன. #GujaratCanalAccident
சூரத்:

குஜராத் மாநிலம் டாப்பி மாவட்டம் கப்புரா கிராமத்தைச் சேர்ந்த ஜீவன் கமீத்(65), ஷர்மிளா(62), தர்மேஷ்(41), சுனிதா(36), ஊர்வி(6) ஆகியோர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி காணாமல் போனதாக அவர்களது உறவினர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சூரத் அருகே உள்ள மதி கிராமத்தில் நேற்றிரவு போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கால்வாய் ஒன்றில் கார் விழுந்து  கிடந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து மீட்புப்படையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர், காரை மீட்டனர். அதில் 5 பேரின் சடலங்கள் மிகவும் அழுகிய நிலையில் இருந்துள்ளன. இதனையடுத்து போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் குடும்பத்துடன் பர்தோலி பகுதியில் உள்ள கோவிலுக்கு பிரார்த்தனைக்காக சென்றதாகவும்,  திரும்பி வரும்போது இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.  #GujaratCanalAccident 
Tags:    

Similar News