செய்திகள்

நிருபர்களை சந்திக்காத பிரதமர் மோடி பதவி விலகும் நேரம் வந்து விட்டது - சத்ருகன் சின்கா

Published On 2019-03-15 05:29 GMT   |   Update On 2019-03-15 08:49 GMT
நிருபர்களை சந்திக்காத பிரதமர் மோடி பதவி விலகும் நேரம் வந்து விட்டது என்று சத்ருகன் சின்கா கூறியுள்ளார். #ShatrughanSinha #PMModi

பாட்னா:

நடிகரும், பா.ஜனதா அதிருப்தி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியின் ஆட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மோடி ஒருமுறை கூட நிருபர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று ஒரு கேள்விக்குகூட பதில் அளிக்க வில்லை. இதனால் தனது நிறை, குறைகளை அவரால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

இப்போது பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனிவரும் நாட்களில் மோடி நிருபர்களை சந்திக்க நேரிடும். அதற்காக இப்போது இருந்தே ஒத்திகை பார்த்து எப்படி நடிக்க வேண்டும் என்று உங்களை (மோடி) நீங்களே இயக்கி தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

 


நான் அறிந்த வரையில் ஜனநாயக உலகில் தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட கேள்வி-பதில்களை எதிர்கொள்ளாத பிரதமர் என்ற மோசமான வரலாறை நீங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள்.

மோடி தலைமை பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள இதுவே மிகச் சரியான சிறந்த தருணம் ஆகும். எனவே மாற்று அரசு ஏற்படுவதற்கு முன்பு புதிதாக நல்ல தலைமை பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 150-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை அவசரமாக ஒரே மாதத்தில் அறிவித்தீர்கள். இதை மேலோட்டமாக காணும் போது தேர்தல் நடத்தை விதிகளுக்குட் பட்டதாகவே இருக்கும்.

ஆனால் உண்மையில் இது மிக தாமதமாகவும், மிக குறைந்த அளவில் நடத்தப்படும் ஒரு மொத்த வியாபாரத்துக்கு இணையான செயலாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ShatrughanSinha #PMModi

Tags:    

Similar News