செய்திகள்

அபினந்தன் விடுவிக்கப்படுவார் என்ற இம்ரான்கான் அறிவிப்புக்கு மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா வரவேற்பு

Published On 2019-02-28 13:36 GMT   |   Update On 2019-02-28 13:36 GMT
இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என பாக். பிரதமர் இம்ரான்கான் அறிவித்ததற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றுள்ளனர். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan #MehboobaMufti #OmarAbdullah
ஸ்ரீநகர்:

பாகிஸ்தானி தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய விமானப்படை விமானி அபினந்தனை பாக். ராணுவத்தினர் கைது செய்தனர். அவர் தங்களிடம் இருப்பது போன்ற வீடியோவை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டது.

இதையடுத்து, பாகிஸ்தானிடம் சிக்கிய அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள்  வலியுறுத்தின.

இதற்கிடையே, நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என பாக். பிரதமர் இம்ரான்கான் அறிவித்ததற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என்ற பாக். பிரதமர் இம்ரான்கானின் அறிவிப்பை வரவேற்கிறேன். இது பேச்சுவார்த்தைக்கான முதல் படியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், முன்னாள் முதல் மந்திரியான உமர் அப்துல்லாவும் தனது சமூக வலைதள பக்கத்தில், அபினந்தன் விடுதலை குறித்த இம்ரான்கான் அறிவிப்பை வரவேற்றுள்ளார். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan #MehboobaMufti #OmarAbdullah
Tags:    

Similar News