செய்திகள்
நிரவ் மோடியின் ரூ.147 கோடி சொத்துகள் முடக்கம்
மும்பை மற்றும் சூரத்தில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. #PunjabNationalBank #NiravModi #EnforcementDirectorate
மும்பை:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பை மற்றும் சூரத்தில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. இதில் கட்டிடங்கள், 8 கார்கள், நகைகள், ஓவியங்களும் அடங்கும். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. #PunjabNationalBank #NiravModi #EnforcementDirectorate
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.