செய்திகள்

ரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை

Published On 2019-02-21 07:22 GMT   |   Update On 2019-02-21 07:22 GMT
ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #SC #RafaleDeal
புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரக 36 விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ரபேல் விமானங்களை வாங்க அதிக விலை கொடுக்கப்பட்டதாகவும், அனில் அம்பானிக்கு சாதகமாக பிரதமர் நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் புகார் கூறியது.

ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த்சின்கா, அருண்ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



இந்த மனுவை கடந்த டிசம்பர் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தத்தில் எந்த சந்தேகமும் இல்லை. மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. இதனால் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் ரபேல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்ததால் இது குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த சீராய்வு மனுக்களை பிரசாந்த் பூசன் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்தனர்.

இந்த சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #SC #RafaleDeal
Tags:    

Similar News