செய்திகள்

சாரதா சிட்பண்ட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விலகல்

Published On 2019-02-20 10:22 GMT   |   Update On 2019-02-20 11:04 GMT
சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அறிவித்துள்ளார். #SaradhaScam #CBI

புதுடெல்லி:

சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள், எல்.நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கன்னா ஆகிய 3 பேர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகுவதாக நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அறிவித்தார். மேலும் இந்த வழக்கில் மே.வங்காள அரசு சார்பில் வக்கீல்ஆக ஆஜராக போவதாகவும் கூறினார்.

அதை தொடர்ந்து விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு பெஞ்ச் ஒத்தி வைத்தது. #SaradhaScam #CBI

Tags:    

Similar News