செய்திகள்

ரபேல் ஒப்பந்தத்தை கணக்கு தணிக்கை அதிகாரி ஏற்றுக்கொண்டது நகைச்சுவை - ப.சிதம்பரம் கருத்து

Published On 2019-02-14 22:32 GMT   |   Update On 2019-02-14 22:32 GMT
ரபேல் ஒப்பந்தத்தை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஏற்றுக்கொண்டது நகைச்சுவை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #Rafale #CAG #Joke #Chidambaram
புதுடெல்லி:

ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறியிருப்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அதனை ஏற்றுக்கொண்டது ஒரு நகைச்சுவையாக ஆகிவிட்டது. வருங்காலத்தில் அமையும் அரசு அந்த அமைப்பின் பெருமையையும், ஸ்திரத்தன்மையையும் மீட்கும். ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்டுள்ள எண்ணிக்கை தொடர்பான பிரச்சினைகள், விலை நிர்ணயம், ஒப்படைத்தல் போன்ற பல பிரச்சினைகள் குறித்து அந்த 33 பக்க அறிக்கை விளக்கும் என்றும், அதில் சரியானது, ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிப்படைத்தன்மை ஆகியவை பற்றி கருத்து வெளியிடும் என்றும் நீங்கள் எதிர்பார்த்தீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஏமாந்துபோவீர்கள்.

இதுவே இறுதியானது என்று சொல்வதற்கு தலைமை கணக்கு தணிக்கையர் ஒன்றும் கடவுள் அல்ல.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #Rafale #CAG #Joke #Chidambaram

Tags:    

Similar News