செய்திகள்

பெண் எம்.பி. வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை

Published On 2019-02-13 08:37 GMT   |   Update On 2019-02-13 08:37 GMT
கர்நாடக மாநில பா.ஜனதா பெண் எம்.பி. ஷோபா காரன்ட்லஜி வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. #ShobhaKarandlaje
புதுடெல்லி:

கர்நாடக மாநில பா.ஜனதா பெண் எம்.பி. ஷோபா காரன்ட்லஜி. இவர் தனது சம்பள பணம் வரும் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அதில் ரூ.15 லட்சத்து 62 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் பல பரிவர்த்தனை மூலம் பணம் திரட்டப்பட்டு இருந்தது. ஆனால் வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது எஸ்.எம்.எஸ். தகவல் எதுவும் வரவில்லை. மர்ம நபர்கள் அவரது வங்கி கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஷோபா காரன்ட்லஜி கூறும்போது, “எனது வங்கி கணக்கில் இருந்து நான் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு முறையும் எஸ்.எம்.எஸ். தகவல் வரும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்படும்போது கூட எனக்கு எந்த எஸ்.எம்.எஸ். தகவலும் வரவில்லை” என்றார்.

இந்த மோசடி குறித்து வடக்கு அவென்யூ போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஷோபா காரன்ட்லஜி எம்.பி. வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த பண பரிவர்த்தனை உள்நாட்டில் நடந்ததா? அல்லது வெளிநாட்டில் நடந்ததா? என்ற விவரத்தை வங்கியிடம் இருந்து கேட்டு இருக்கிறோம்” என்றார்.

கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் செயலாளர் அசோக் மாலிக்கின் கிரடிட் கார்டு மூலம் மர்ம நபர்கள் ரூ.1.38 லட்சத்தை திருடினர் என்பது குறிப்பிடத்தக்கது. #ShobhaKarandlaje
Tags:    

Similar News