செய்திகள்
கோப்பு படம்

ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி தப்பினார்

Published On 2019-02-12 14:45 GMT   |   Update On 2019-02-12 14:45 GMT
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மெர் மாவட்டத்தில் இன்று மாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #MIG27crashed #jaisalmerMIG27crashed
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மெர் மாவட்டத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று மாலை MIG 27 ரகத்தை சேர்ந்த ஒரு போர் விமானம் புறப்பட்டுச் சென்றது.

அம்மாவட்டத்தின் போக்ரான் பகுதி அருகே உள்ள ஏட்டா கிராமத்தின் மீது பறந்து சென்றபோது மாலை 6 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.  அதில் சென்ற ஒரு விமானி அவசர கதவு வழியாக பாரசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார்.

இவ்விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #MIG27crashed  #jaisalmerMIG27crashed 
Tags:    

Similar News