செய்திகள்
பிரதமர் மோடியுடன் மொனாக்கோ இளவரசர் சந்திப்பு - முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். #MonaccoPrince #PMModi #SushmaSwaraj
புதுடெல்லி:
மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் அரசுமுறை பயணமாக இந்தியாவில் நேற்று முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தலைநகர் டெல்லியில் மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று சந்தித்துப் பேசினார். இருதரப்பை சேர்ந்த அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான விசா விதிகள் குறித்தும் மற்றும் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் தில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. #MonaccoPrince #PMModi #SushmaSwaraj