செய்திகள்

பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டி - நடிகை ஹேமமாலினி அறிவிப்பு

Published On 2019-01-30 07:35 GMT   |   Update On 2019-01-30 07:35 GMT
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக நடிகை ஹெமமாலினி தெரிவித்துள்ளார். #HemaMalini #Mathura #BJP
மதுரா:

உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரெயில் நிலையத்தில் தானியங்கி படிக்கட்டு, மின்தூக்கி, நவீன நடைமேம்பாலம், சூரிய மின்சக்தி திட்டம், மேம்படுத்தப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, பிரமாண்ட நுழைவு வாயில் ஆகியவை தொடக்கவிழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அந்த தொகுதி எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



மதுரா ரெயில் நிலையம் நவீன மயமாக்கப்படும் என்று தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன். இந்த பணியில் ரெயில்வே அதிகாரிகள் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தார்கள்.

ஆன்மீக தளமான மதுராவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்ல வசதியாக மேலும் பல ரெயில்களை இயக்க வேண்டும் என்று ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறேன். இதற்கு பா.ஜனதா தலைமை ஒப்புதல் அளித்து விட்டது. கடந்த தேர்தலில் பெற்றதை விட சிறப்பான வெற்றியை மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு எம்.பி.யாக இந்த தொகுதியில் சிறப்பாக பணியாற்றியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். #HemaMalini #Mathura #BJP
Tags:    

Similar News