செய்திகள்

மத்திய மந்திரியாக இருக்க தகுதியற்றவர் - அனந்தகுமார் ஹெக்டே மீது ராகுல் காந்தி ஆவேசம்

Published On 2019-01-28 23:04 GMT   |   Update On 2019-01-28 23:04 GMT
அனந்தகுமார் ஹெக்டே மத்திய மந்திரியாக இருக்க தகுதியற்றவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். #HinduGirl #AnanthKumarHegde #RahulGandhi
புதுடெல்லி:

மத்திய திறன் மேம்பாட்டு இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்து பெண்ணை தொட்டவரின் கை, உடம்பில் இருக்கக்கூடாது” என்றார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கண்டனம் தெரிவித்தார். அதற்கு அனந்தகுமார் ஹெக்டே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் “தினேஷ் குண்டுராவ், ஒரு முஸ்லிம் பெண்மணியின் பின்னால் ஓடியவர் என்று மட்டுமே எனக்கு தெரியும்” என்று கூறி இருந்தார்.



இந்நிலையில், ஹெக்டேவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். “இந்த மனிதர் ஒவ்வொரு இந்தியரையும் தர்மசங்கடப்படுத்துகிறார். அவர் மத்திய மந்திரியாக இருக்க தகுதியற்றவர். எனவே, அவரை நீக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #HinduGirl #AnanthKumarHegde #RahulGandhi 
Tags:    

Similar News