செய்திகள்

கர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்

Published On 2019-01-15 09:55 GMT   |   Update On 2019-01-15 10:17 GMT
கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர். #Kumaraswamy #IndependentMLAs #WithdrawSupport
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க பாஜக ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர்.



இதுதொடர்பாக அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் குமாரசாமி அரசுக்கு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 117 ஆக குறைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் விலகலால் குமாரசாமி அரசுக்கு ஆபத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Kumaraswamy #IndependentMLAs #WithdrawSupport
Tags:    

Similar News