செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம்

Published On 2019-01-02 15:34 IST   |   Update On 2019-01-02 15:34:00 IST
கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
கேரளாவில் நடைபெற்ற பெண்கள் மனித சுவர் போராட்டத்தில் பங்கேற்பதற்காக காயங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பிரதீபா இருசக்கர வாகனத்தில் வந்தார். அவர் தலையில் வெள்ளை நிற ரிப்பன் மட்டும் கட்டியிருந்தார். ஹெல்மெட் அணியாமல் பெண் எம்.எல்.ஏ. இருசக்கர வாகனம் ஓட்டிய காட்சி அடங்கிய வீடியோ இணையதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காயங்குளம் போலீசாரும் பிரதீபா எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.100 அபராதம் செலுத்தினார். #tamilnews
Tags:    

Similar News