செய்திகள்

உத்தரப்பிரதேசம் - குடிசைக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 7 பேர் பரிதாப பலி

Published On 2019-01-01 11:30 GMT   |   Update On 2019-01-01 11:30 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் சாலையோர குடிசைகள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #UPAccident
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சந்தவுலி மாவட்டம் வழியாக கால்நடைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த லாரி மால்டா கிராமத்தின் அருகில் சென்றபோது, தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், நிலைதடுமாறிய லாரி
சாலையோர குடிசைகள் மீது வேகமாக மோதியது.

இந்த திடீர் விபத்தில் குடிசையில் இருந்தவர்களில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒரு சிறுமி படுகாயம் அடைந்தார்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். #UPAccident
Tags:    

Similar News