செய்திகள்

முத்தலாக் மசோதா - பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் டிசம்பர் 31ம் தேதி ஆலோசனை

Published On 2018-12-28 10:35 GMT   |   Update On 2018-12-28 10:35 GMT
முத்தலாக் மசோதா குறித்து விவாதிக்க, பாராளுமன்றத்தில் டிசம்பர் 31ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. #Parliment #WinterSession #TripleTalaqBill #OppositionPartiesMeet
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று கூடியது. அப்போது, மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் 31-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் முத்தலாக் மசோதா குறித்து விவாதிப்பது தொடர்பாக டிசம்பர் மாதம் 31-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. #WinterSession #TripleTalaq Bill #OppositionPartiesMeet
Tags:    

Similar News