செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் கடும் சண்டை- 6 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்

Published On 2018-12-22 05:21 GMT   |   Update On 2018-12-22 05:21 GMT
ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் நடந்த என்கவுண்டரில், பயங்கரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த அரம்போரா கிராமத்தை பாதுகாப்பு படையினர் இன்று காலையில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.



அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. #JKEncounter
Tags:    

Similar News