செய்திகள்

டெல்லி - சோதனை ஓட்டத்தின் போது அதிவேக ரெயில் மீது கல்வீச்சு

Published On 2018-12-20 13:44 GMT   |   Update On 2018-12-20 13:44 GMT
டெல்லி மற்றும் ஆக்ரா இடையே இன்று நடைபெற்ற சோதனை ஓட்டத்தின்போது அதிவேக ரெயில் மீது கல்விசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். #Train18 #Peltedstonesintrialrun
புதுடெல்லி:

ரெயில்வே துறையால் நாட்டின் அதிவேக ரெயிலான டிரெயின் 18 டிசம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரெயில் டெல்லி மற்றும் ஆக்ரா நகரங்களை இணைக்கும்.

சென்னை ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ரூ.100 கோடி செலவில் உருவான டிரெயின் 18 அதிவேக ரெயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சதாப்தி ரெயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் இந்த அதிவேக ரெயிலானது என்ஜின் இல்லாமல் இயங்கும் முதல் ரெயில் என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த அதிவேக ரெயிலின் சோதனை ஓட்டம் டெல்லி மற்றும் ஆக்ரா இடையே இன்று நடைபெற்றது.  அப்போது இந்த  ரெயில் பெட்டி ஒன்றில் கல் வீசப்பட்டது.

இதுதொடர்பாஜ ஐசிஎப் பொது மேலாளர் சுதான்ஷு மனு டுவிட்டரில் கூறுகையில், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலை தலைமை வடிவமைப்பு பொறியாளர் ஸ்ரீனிவாஸ் ரெயில் பெட்டியில் இருந்துள்ளார். அதிவேக ரெயில் மணிக்கு 181 கிலோமீட்டர் வேகத்தினை எட்டி சாதனை படைத்துள்ளது. சோதனை ஓட்டத்தில் ரெயில் மீது மர்ம நபர் ஒருவர் கல்லை தூக்கி வீசியதில் கண்ணாடி உடைந்துள்ளது. அவரை பிடித்து விடுவோம் என நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.

அதிவேக ரெயில் மீது கல் வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Train18 #Peltedstonesintrialrun
Tags:    

Similar News