செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா எங்கள் கூட்டணியில் நிச்சயம் இருக்கும் - அமித்ஷா நம்பிக்கை

Published On 2018-12-19 15:06 GMT   |   Update On 2018-12-19 15:06 GMT
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி எங்கள் கூட்டணியில் நிச்சயம் இருக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #ParlimentElections#Sivasena
மும்பை:
 
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி அங்கம் வகித்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் அந்த கட்சி கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆனாலும், சமீப காலமாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசை கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி எங்கள் கூட்டணியில் நிச்சயம் இருக்கும் எனபாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிராவின் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூட்டணி கட்சியான சிவசேனா தலைமையுடன் நல்ல உறவில் இருந்து வருகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் சிவசேனா கூட்டணி வகித்து வருகிறது.

எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் சிவசேனா கட்சி நிச்சயம் அங்கம் வகிக்கும் என தெரிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவோம் என சிவசேனா கட்சி அறிவித்திருந்த நிலையில், பாஜக தலைவர் இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmitShah #ParlimentElections#Sivasena
Tags:    

Similar News