செய்திகள்

சத்தீஸ்கர் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் தேர்வு - நாளை மாலை பதவியேற்பு

Published On 2018-12-16 09:07 GMT   |   Update On 2018-12-16 09:28 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ChhattisgarhCM
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. கடுமையான தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றனர். 15 இடங்களை மட்டுமே பா.ஜ.க.வால் பிடிக்க முடிந்தது.



தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அசுர பலத்தை பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ராய்ப்பூர் நகரில் நடந்தது. 

டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அம்மாநிலத்தின் மூன்றாவது முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டாவது முதல் மந்திரியாகவும் பூபேஷ் பாகேல் நாளை மாலை 5 மணியளவில் பதவி ஏற்கிறார். #bhupeshbaghel #Chattisgarh
Tags:    

Similar News