செய்திகள்
காஷ்மீரில் அட்டூழியம் - போலீஸ் அதிகாரியை கடத்தி கொன்ற தீவிரவாதிகள்
காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரி பசரத் அகமதுவை கடத்தி சென்ற தீவிரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர். #JK #MilitantsAttack
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் கடந்த வாரம் 2 வாலிபர்களை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர். இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரியை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர் பசரத் அகமது. முன்னாள் சிறப்பு போலீஸ் அதிகாரி. அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் இவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சகத் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரும் கடத்தப்பட்டனர். இவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதில் பசரத் அகமதுவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர்.
கடத்தப்பட்ட சகித் அகமது, ரியாஸ் ஆகிய இருவரையும் தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். #JK #MilitantsAttack
காஷ்மீரில் கடந்த வாரம் 2 வாலிபர்களை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர். இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரியை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர் பசரத் அகமது. முன்னாள் சிறப்பு போலீஸ் அதிகாரி. அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் இவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சகத் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரும் கடத்தப்பட்டனர். இவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதில் பசரத் அகமதுவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர்.
கடத்தப்பட்ட சகித் அகமது, ரியாஸ் ஆகிய இருவரையும் தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். #JK #MilitantsAttack