செய்திகள்

ம.பி.யில் சோகம் - பள்ளி வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 மாணவர்கள் பலி

Published On 2018-11-22 10:25 GMT   |   Update On 2018-11-22 10:25 GMT
மத்திய பிரதேசத்தில் பள்ளி வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் டிரைவர், பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டம் பீர்சிங்கபூர் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பேருந்தும், பள்ளி வேனும் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த  6 மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுனர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.



தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
Tags:    

Similar News