செய்திகள்
கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி
கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். #GajaCyclone #Modi
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஜா புயலால ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார். #GajaCyclone ##Modi