செய்திகள்

மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்பு

Published On 2018-11-09 10:30 GMT   |   Update On 2018-11-09 10:55 GMT
மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக வரும் 17-ம் தேதி இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Moditoattend #Maldivespresident
புதுடெல்லி:

சிங்கப்பூர் நாட்டில் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் கிழக்காசியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

முன்னதாக, மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக  இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இந்த அழைப்பை ஏற்று சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி வரும் 17-ம் தேதி நடைபெறும் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார். #Moditoattend #Maldivespresident
Tags:    

Similar News