search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ibrahim Mohamed Solih"

    மாலத்தீவின் புதிய அதிபரான இப்ராகிம் மொகமது சாலிக் பதவியேற்பு விழாவில் நேரில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.#Maldivespolls #IbrahimMohamedSolih #PMModi
    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து புதிய அதிபராக இன்று அவர் பதவியேற்றார்.

    தலைநகர் மாலேவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பங்கேற்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய அதிபராக பதவியேற்ற இப்ராகிம் மொகமது சாலிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மாலத்தீவின் புதிய அதிபராக இன்று பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மாலத்தீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. தங்களது பணியை திறம்பட ஆற்றும்படி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி முதன்முறையாக மாலத்தீவு செல்வது குறிப்பிடத்தக்கது. #Maldivespolls #IbrahimMohamedSolih #PMModi
    மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்து தெரிவிக்கிறார்.#Maldivespolls #IbrahimMohamedSolih #PMModi

    புதுடெல்லி:

    மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.

    அதை தொடர்ந்து புதிய அதிபராக இன்று அவர் பதவி ஏற்கிறார். இதற்கான விழா தலைநகர் மாலேவில் நடக்கிறது.

    விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்துகிறார். அதற்காக இன்று அவர் மாலத்தீவு புறப்பட்டு செல்கிறார்.

    இதுகுறித்து டுவிட்டரில் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “மாலத்தீவின் புதிய அதிபராக இன்று பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


    மாலத்தீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.

    சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயகம் மலர்வதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். மாலத்தீவில் நிலையான ஜனநாயகம், அமைதி நிலவ வேண்டும் என இந்தியா விரும்புகிறது”

    தங்களது பணியை திறம்பட ஆற்றும்படி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    பிரதமராக பதவி ஏற்ற பிறகு தற்போது தான் மோடி முதன்முறையாக மாலத்தீவு செல்கிறார். #Maldivespolls #IbrahimMohamedSolih #PMModi

    மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக வரும் 17-ம் தேதி இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Moditoattend #Maldivespresident
    புதுடெல்லி:

    சிங்கப்பூர் நாட்டில் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் கிழக்காசியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    முன்னதாக, மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக  இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


    இந்த அழைப்பை ஏற்று சிங்கப்பூரில் இருந்து மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி வரும் 17-ம் தேதி நடைபெறும் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார். #Moditoattend #Maldivespresident
    ×