செய்திகள்
குடும்பத்துக்கு 2 குழந்தை திட்டம் - அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்த கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #SupremeCourt #TwoChildNorm
புதுடெல்லி:
சமூக சேவகரும், ஒரு தொண்டு நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அனுபம் பாஜ்பாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். மேலும், “மக்கள் தொகை அபாயகரமாக உயர்ந்து வருவதால், வனவளம் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன. எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. எனவே, 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்க வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசின் எந்த சலுகையும் வழங்கக்கூடாது” என்று மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த கோரிக்கையை அரசு நிர்வாகத்திடம் எடுத்துச் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
சமூக சேவகரும், ஒரு தொண்டு நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அனுபம் பாஜ்பாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். மேலும், “மக்கள் தொகை அபாயகரமாக உயர்ந்து வருவதால், வனவளம் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன. எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. எனவே, 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்க வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசின் எந்த சலுகையும் வழங்கக்கூடாது” என்று மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த கோரிக்கையை அரசு நிர்வாகத்திடம் எடுத்துச் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.