செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டரில் 5.3 ஆக பதிவு

Published On 2018-10-29 16:05 GMT   |   Update On 2018-10-31 04:43 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று இரவு 8 மணியளவில் ரிக்டரில் 5.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #Earthquake
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. #Earthquake
Tags:    

Similar News