செய்திகள்

டெல்லியில் ரூ.32 கோடி மதிப்புடைய 8 கிலோ ஹெராயின் பறிமுதல் - நைஜீரியன் உள்பட 2 பேர் கைது

Published On 2018-10-29 11:38 GMT   |   Update On 2018-10-29 11:38 GMT
டெல்லியில் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து நைஜீரியன் உள்பட 2 பேரை கைது செய்தனர். #DelhiMetro #Heroin
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் சாகேத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் போதை பொருள் கடத்தப்படுவதாக டெல்லி போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டெல்லி போலீசார் இன்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். 

அவர்களிடம் நடத்திய சோதனையில் 8 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 32 கோடி ரூபாய் மதிப்புடையது.

இதையடுத்து, அவர்கள் கடத்தி வந்த 8 கிலோ ஹெராயினை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஹெராயினை கடத்தி வந்த ஆஸ்கார் என்ற நைஜீரிய நாட்டு ஆசாமி உள்பட 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். #DelhiMetro #Heroin
Tags:    

Similar News