செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம் - சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை

Published On 2018-10-28 18:44 IST   |   Update On 2018-10-28 18:44:00 IST
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வீடு திரும்பிய சப் இன்ஸ்பெக்டரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Pulwama #MilitantsShooting
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் செவா காலன் பகுதியில் குண்டுகள் துளைத்த நிலையில் போலீஸ்காரர் ஒருவரது உடல் கிடப்பதை அப்பகுதி மக்கள் இன்று கண்டனர். இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில் அவர் ஸ்ரீநகர் சிஐடி பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் இம்தியாஸ் அகமது மிர் என்பதும்,  அவர் பணி முடிந்து வீடு திரும்பியபோது பயங்கரவாதிகள் அவரை சுட்டு கொன்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #Pulwama #MilitantsShooting
Tags:    

Similar News