செய்திகள்

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி ஷின்ஸோ அபே உடன் சந்திப்பு

Published On 2018-10-28 06:26 GMT   |   Update On 2018-10-28 06:26 GMT
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபை இன்று சந்தித்தார். இருநாட்டு இடையிலான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.#Modi
புதுடெல்லி:

இந்தியா - ஜப்பான் இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று ஜப்பான் சென்றார்.

அவருக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் மந்திரிகள், உயரதிகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-ஐ பிரதமர் மோடி  சந்தித்து பேசினார். இந்த தகவலை பிரதமர் மோடியின் அலுவலகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. டுவிட்டரில் ‘‘பிரதமர் மோடி- ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே யமனஷியில் சந்தித்தார்கள். இன்று முழுவதுமான அவர்களிடையிலான பேச்சுவார்த்தை இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்கும்’’ என்று பதிவிட்டுள்ளது.
Tags:    

Similar News