செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கடும் சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ஒரு வீரரும் உயிரிழப்பு

Published On 2018-10-26 05:28 GMT   |   Update On 2018-10-26 05:28 GMT
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஒரு வீரர் உயிரிழந்தார். #KashmirEncounter #JKSoldierKilled
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் உள்ள பாசல்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.



இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பயங்கரவாதிகள் தொடர்பான வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் சோபோர் பகுதியில் இன்று செல்போன் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.  #KashmirEncounter  #JKSoldierKilled
Tags:    

Similar News