செய்திகள்

6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த பரிசீலிக்கப்படும் - ஓ.பி.ராவத்

Published On 2018-10-25 10:31 GMT   |   Update On 2018-10-25 11:03 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். #OPRawat #18MLACase
புதுடெல்லி:

தமிழகத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து இருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றும், இடைத்தேர்தலை நடத்த தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால், 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், விரைவில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. #OPRawat #18MLACase
Tags:    

Similar News