செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

Published On 2018-10-25 10:05 GMT   |   Update On 2018-10-25 11:06 GMT
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேரின் மீது துணை குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது. #AircelMaxisCase #ED #PChidambaram
புதுடெல்லி:

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு உதவியதாக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மீதும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம் உட்பட 9 பேரின்மீது துணை குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில், குற்றம் செய்ததற்கு முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டு இருப்பதாகவும், அதனால், நவம்பர் 26-ம் தேதி இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.   #AircelMaxisCase #ED #PChidambaram
Tags:    

Similar News