செய்திகள்

ராஜினாமாவை திரும்ப பெற்றார் அசாம் பாஜக எம்எல்ஏ

Published On 2018-10-25 08:45 GMT   |   Update On 2018-10-25 08:45 GMT
அசாம் மாநிலத்தில் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய முடியாததால் பதவி விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் அனுப்பிய பாஜக எம்எல்ஏ இன்று ராஜினாமாவை திரும்ப பெற்றார். #AssamMLA #BJPMLAResign
கவுகாத்தி:

அசாம் மாநிலம் துலியாஜன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேராஷ் கோவல்லா. ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த இவர், எம்எல்ஏவாக தன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறி பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். முதல்வர் சர்பானந்த சோனாவலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். ஆனால் சபாநாயரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை.



தனது தொகுதியில் உள்ள அசாம் கேஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு சமீபத்தில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டதில் தன்னை புறக்கணித்ததாக அவர் கூறியிருந்தார். தற்போது முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராஜினாமா முடிவை திரும்ப பெற்றுள்ளார்.

இதுபற்றி தேராஷ் கோவல்லா கூறுகையில், ‘நேற்று இரவு முதல்வர் என்னை அழைத்து பேசினார். அப்போது, பல்வேறு சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் இந்த பணி நியமனத்தில் உள்ள சிக்கல்கள் இருந்ததாக முதல்வர் விளக்கினார். எனது கவலைகளை ஏற்றுக்கொண்ட அவர், எதிர்காலத்தில் அது சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். அவர் கேட்டுக்கொண்டதால் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன். இது தொடர்பாக அவருக்கு மெயில் அனுப்பி உள்ளேன்’ என்றார். #AssamMLA #BJPMLAResign
Tags:    

Similar News