செய்திகள்

காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2018-10-24 16:59 IST   |   Update On 2018-10-24 16:59:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தளபதி உள்பட இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Militantskilled #Nowgamencounter
ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நவ்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட சுத்து கொத்தைர் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவன் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி சப்ஸார் அஹமது சோபி, இன்னொருவன் ஆசிப் அஹமது என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Militantskilled #Nowgamencounter 
Tags:    

Similar News