செய்திகள்
2030-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் பெரும்பங்கு வகிக்கும் - பிரதமர் மோடி பேச்சு
2030-ம் ஆண்டுக்குள், நமது மின்சார தேவையில் 40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்திசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். #India #NonFossilFuel #Modi
புதுடெல்லி:
டெல்லி விஞ்ஞான பவனில், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி என்ற அமைப்பின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசியதாவது:-
கடந்த 200 ஆண்டுகளாக, பூமிக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரி போன்ற பொருட்களைத்தான் மின்சார தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால், பாதுகாப்பான எதிர்காலத்துக்காக, பூமிக்கு மேலே கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை போன்ற வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
2030-ம் ஆண்டுக்குள், நமது மின்சார தேவையில் 40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்திசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார். #India #NonFossilFuel #Modi
டெல்லி விஞ்ஞான பவனில், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி என்ற அமைப்பின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசியதாவது:-
கடந்த 200 ஆண்டுகளாக, பூமிக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரி போன்ற பொருட்களைத்தான் மின்சார தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால், பாதுகாப்பான எதிர்காலத்துக்காக, பூமிக்கு மேலே கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை போன்ற வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
2030-ம் ஆண்டுக்குள், நமது மின்சார தேவையில் 40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்திசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார். #India #NonFossilFuel #Modi