செய்திகள்
கேரள போலீஸ் கஸ்டடியில் பிஷப் பிராங்கோ முல்லக்கல் - நாளையும் விசாரிக்க முடிவு
கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜரான பிஷப் பிராங்கோ முல்லக்கலிடம் நாளையும் விசாரணையை தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.
கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். பிராங்கோ முல்லக்கல் இந்த புகார் தொடர்பான இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியதன் பெயரில் அவர் இன்று ஆஜரானார்.
வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய விசாரணை முடிந்த நிலையில், அவரிடம் நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.