செய்திகள்

நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரக்கூடாது - டிடிவி தினகரன்

Published On 2018-09-19 09:36 GMT   |   Update On 2018-09-19 09:36 GMT
பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரக்கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தினார். #TTVDhinakaran #NEET
பெங்களூரு:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாள் டிடிவி தினகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டங்கள், விவசாயத்தை பாதிக்காத திட்டங்களை அரசு கொண்டு வரவேண்டும் என்றும், ஒவ்வொரு பொழுதும் இன்று என்ன திட்டத்தை அறிவிக்க உள்ளார்களோ என்ற அச்சத்தோடு தான் விடிவதாகவும் அவர் கூறினார்.



மேலும், பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரக்கூடாது என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.

இதற்கிடையே பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் எம்எல்ஏ கருணாசும் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கொண்டு வரப்பட உள்ளதாகவும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. #TTVDhinakaran #NEE
Tags:    

Similar News