செய்திகள்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்

Published On 2018-09-16 07:14 GMT   |   Update On 2018-09-16 07:14 GMT
கடந்த மக்களவை தேர்தலில் மோடிக்காக வியூகங்களை வகுத்த பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். #PrashantKishor #NitishKumar #JDU
பாட்னா:

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் பல திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் சிறந்தவர் என்ற பெயரை பெற்றவர். கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார்.

பின்னர் பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், உ.பி.,யில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய அவரது வியூகம் வெற்றி பெறவில்லை. இதனால், சில நாட்கள் அவர் அமைதியாக இருந்தார். 

இந்நிலையில், இன்று பாட்னாவில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் முன்னிலையில், அக்கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். 
Tags:    

Similar News