செய்திகள்

தெலுங்கானா பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2018-09-11 23:43 GMT   |   Update On 2018-09-11 23:43 GMT
தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Telangana #BusAccident #Modi
புதுடெல்லி:

தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மலைப்பள்ளத்தாக்கில் அந்த பேருந்து கவிழ்ந்து விழுந்தது.
 
விபத்து குறித்து தகவலறிந்த ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர் இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 57 பேர் வரை இறந்துள்ளனர். விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தெலுங்கானா பேருந்து விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். #Telangana #BusAccident #Modi
Tags:    

Similar News