செய்திகள்

நவாஸ் ஷரிப் மனைவி மரணத்துக்கு சுஷ்மா சுவராஜ் இரங்கல்

Published On 2018-09-11 20:12 GMT   |   Update On 2018-09-11 20:12 GMT
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிபின் மனைவி குல்சூம் நவாஸ் மரணத்துக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். #KulsumNawaz #SushmaSwaraj
புதுடெல்லி:

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
 
இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக்குறைவால் தற்போது உயிரிழந்தார். 68 வயதான இவர், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிபின் மனைவி குல்சூம் நவாஸ் மரணத்துக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #KulsumNawaz #SushmaSwaraj
Tags:    

Similar News