செய்திகள்

டெல்லி - செங்கோட்டை அருகே 2 பயங்கரவாதிகள் கைது

Published On 2018-09-07 11:00 GMT   |   Update On 2018-09-07 11:00 GMT
டெல்லி செங்கோட்டை அருகே 2 பயங்கரவாதிகளை சிறப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #MilitantsArrest
புதுடெல்லி:

டெல்லி செங்கோட்டை அருகே டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவினர் இன்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றினர்.

அவர்கள் நாசவேலையில் ஈடுபட்டனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்தாகவும், ஐ.எஸ்.ஜே.கே என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. 

டெல்லி செங்கோட்டை அருகே 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #MilitantsArrest
Tags:    

Similar News